Sunday, June 6, 2010

துக்கடாக்கள்...

ஏதோ ஒரு இரவு நேரப் பயணத்தில், எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

என் இமைகள்மட்டும் உண்ணாவிரதம் இருந்து, உறங்க மறுத்தன!!!


எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
உன்னை எதிரே பார்த்தபோது...

மலரென உன்னை வர்ணிக்க மாட்டேன்
மாலையில் நீ இன்னும் அல்லவா அழகாக இருப்பாய்!!!


என்னைக் கவிஞனாய் மாற்றியது உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..
வந்துவிடு!!