Wednesday, March 31, 2010

என் மன வானில்...



கவிதை என்றாலே என்னவென்று தெரியாத நான்,
இன்று வரி வரியாய் கவிதை வரைகிறேன்...
இந்த பக்கங்களை உன் விரல்கள் தீண்டத் தேவையில்லை,
பதங்கள் போதும்!!!


ஓராயிரம் முறை உன்னைக் கடக்கிறேன்...
ஒரு முறையாவது நீ என்னை பார்க்க மாட்டாயா என்று!!!


காதலும் ஒரு வகை தியானம் தான்!!!
மனதை ஒருமுகப்படுத்த வேண்டுமே!
நானும் தியானம் செய்கிறேன்!!!
ஒருமுகத்தோடு... உன் ஒருவனின் முகத்தோடு!!!


உன்னை பற்றி ஒரு கவிதை எழுத வேண்டி அமர்ந்தேன்,
வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினேன்... தவித்தேன்!!!
கைகளில் வெற்று காகிதம்!!!
இப்போது புரிகிறது!!!
ஒரு கவிதையைப் பற்றியே கவிதை எழுத என்னிடம் கற்பனைத் திறன் இல்லையென்று!!!

1 comments:

மாய உலகம் said...

தியானம் மனம் அமைதி பெறும் ஆனால் காதல் தியானம் அவஸ்தை பெறும்

Post a Comment